Wednesday 2 August 2023

Malaysia

23-7-2023.  11-ஆம். உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மிகவும் சிறப்பாக நடந்தேறியது. பல கட்டுரைகளை மலேசிய, அயலக கல்விமான்கள் படைத்தர்கள்....

அதில், தமிழ்நாடு மருத்துவர் ENT டாக்டர் 
M. குமரேசன் அவர்களின்  கட்டுரை மிகவும் சிறப்பாகவும் மக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாகவும் இருந்தது.

ஆண்களின் கீச்சுக்குரல் மரக்கட்டு வைத்தியம் பற்றியப் பேச்சு மக்களுக்கு மிகவும் கருத்தாக இருந்தது.

இவர் வைத்தியத்தின் மூலம் கீச்சுக்குரல் ஆண்களுக்கு  மூன்றே நாட்களில், ஆண்களுக்கு ஆண் குரலில் பேசும் பேச்சுத் திறன் வந்து விடுகிறது...! 

தொல்காப்பியத்தில் கிடைத்த கருத்தை வைத்து, இவர் கண்டுபிடித்த வியப்பு, ஆண்களுக்கான (மரக்கட்டு) கீச்சுக் குரல் வைத்தியம்.

உலகில் இவர் ஒருவர் தான் இந்த வைத்தியத்தை செய்து வருகிறார்!

அதனால், உலகில் கீச்சுக்குரலில் பேசும் ஆண்கள், இவரை வந்து பார்க்கிறார்கள் சென்னையில்..!

கடந்த இரண்டு ஆண்டுகளில், 2,000 கீச்சுக் குரலில் பேசும் ஆண்கள், இப்பொழுது ஆண் குரலில் பேசுகிறார்கள்.

வாழ்த்துகள் டாக்டர் M. குமரேசன்.

இவருக்கு குரல் மன்னன்  என்றும் பட்டம் கொடுக்கலாம், பல்கலைக்கழகத்தில்...

நல்வாழ்த்துகள் மாண்புமிகு. 
டாக்டர் M. குமரேசன் அவர்களுக்கு. அன்புடன்
சுந்தரராஜன். மலேசியா.
24- 7- 2023.

No comments:

Post a Comment